பிறந்தநாளுக்கு கேக் சாப்பிட்ட சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்... அதிர்ச்சி சம்பவம்... நடந்தது என்ன?
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த 10 வயது சிறுமி மண்வி. இவர் கடந்த 24 ஆம் தேதி தனது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார். இதையொட்டி, உறவினர்கள் அங்குள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஆர்டர் செய்தனர். பின்னர் சிறுமிக்கு அவரது குடும்பத்தினர் கேக் ஊட்டிவிட்டனர்.
இந்நிலையில், கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் வாந்தி எடுத்ததாக தெரிகிறது. அதன்பின் அனைவரும் உறங்க சென்ற நிலையில், மறுநாள் காலையில் சிறுமி மண்வி திடீரென உயிரிழந்துள்ளார். இதனை பார்த்து சிறுமியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் பேக்கரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். கேக் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.