இறப்பை நினைத்து எப்போதும் பயமாக இருக்கிறது. பேருந்தில் காரில் இப்படி பயணம் செய்யும் போதும் ஏதாவது ஆகுமோ என்று தோன்றுகிறது. வீட்டுக்குள்ளே பயந்து வாழ்கிறேன். இந்த பயத்தை எப்படி போக்குவது?

 எனக்கும் இது போல எண்ணங்கள் வரும்.. நான் பேருந்தில் ஏறியதும் கடவுளை வணங்குவேன். ஒரு நாள் ஒருவர் மது போதையில் சாலையின் நடுவே நடனம் ஆடிக்கொண்டு இருந்தார். நெரிசலான இடத்தில் பயணிகளுக்கு இடைஞ்சலாக இருந்தது அவரின் வேடிக்கையான விஷயம். பேருந்து ஓட்டுநர் பயந்துகொண்டே பேருந்தை இயக்கினார். எந்த காயமும் இல்லாமல் தப்பித்தார் மதுபோதை ஆசாமி. மற்றொரு நாள் நான் கண்டது, சாலையின் ஓரமாக நடை பாதையில் நடந்து கொண்டிருந்த ஒரு இளம்பெண் மீது,ஒரு பேருந்து தன்னிலை மறந்து, ஓரமாக சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது மோதி அதே இடத்தில் அந்த பெண் துடிதுடித்து இறந்ததை என் கண் முன்னே கண்டேன். இதிலிருந்து நான் புரிந்துகொண்டது என்னவென்றால், நம் இறப்பை தீர்மானிக்கும் உரிமை நமக்கில்லை என்பது தான்.d