காமத்திற்காவும் பணத்திற்காவும் போலி உறவில் இருப்பவர்களுக்கு என்ன அறிவுரை கூறுவீர்கள்?

 கேட்டு கொள்ள தயாராக இருப்பின் அவர்களுக்கு அறிவுரை கூறுவதும் நம் கடமையே,

1 பணம் வந்து போகும் உங்கள் தேவைக்கு போக அதிகம் பணம் வைத்து என்ன வாங்க போகிறீர்கள், சொல்லப்போனால் பணம் தான் மனிதர்களை மனிதர்களாக மற்றவர்களுக்கு காட்டுகிறது நான் மறுக்க வில்லை, நேர்மையா உழையுங்கள் செலவு பண்ணுங்க யாரும் தப்பு சொல்ல போறது இல்ல, தவறான வழி பணம் உங்கள் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடிட தொடங்கும்,,

2 காமம் அதை சரியான வழியில் மேற்கொள்ளுங்கள், முடிந்த வரை மனைவி, கணவனிடம் காணுங்கள், உங்கள் சுயத்திற்காக யாரையும் பலி கொடுக்காதிர்கள்,

3 நீங்கள் செய்யும் தவறு உங்களை மட்டும் இல்ல சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும்

உங்களுக்கு உள்ள விருப்பம் உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க கற்று கொள்ளுங்கள்

நிறைய நல்ல செயல்களை தேடி செயுங்கள்

கேவலமா வாழ்ந்து சாவதை விட உன்னை போல் ஒருவன் வாழ அஷை பட வாழ்ந்து விட்டு செல்லுங்கள்

தவறுகள் செய்யவும் அதை திருத்தி கொள்ளவும் தான் இந்த வாழ்க்கை

பல பேர் துன்பத்தில் துவலும் அதே நேரத்தில் பல பேர் இங்கு இன்பத்தில் மிதக்க தான் செய்கிறார்கள்

உங்களால் ஒருவர் பாதிக்க பட மாட்டார்கள் என்பதை எப்போதும் மனதில் நினையுங்கள்,

மாற்ற முடியாது என்பது மனிதன்னிடத்தில் இல்லை…