உங்கள் வாழ்வில் மிகவும் தாமதமாக தெரிந்து கொண்ட சில உண்மைகளை பகிர முடியுமா?

 

  1. இருபதுகளில், இளைஞர்கள் நிம்மதியாக இருப்பதில்லை. குறிப்பாக ஆண்கள்…
  2. தேவையை விடுத்து, ஆடம்பரத்தை நோக்கியே மனம் செல்கிறது.
  3. நம்மையும் அறியாமல் நம்மை தொற்றிக் கொண்டு வரும் முதல் காதல் தான் உண்மையான காதல். இரண்டாம் முறை மூன்றாம் முறை வருவது, என்னைப் பொருத்தவரை கால்குலேட்டெட் காதல் என்றே கூறுவேன்.
  4. ஈர்ப்போ, காமமோ, முதல் காதல் என்று நாம் செய்யும் ஒன்று, நம் நினைவுகளை விட்டு விலகுவது கடினம்…
  5. சாதாரண விடயங்கள் மிகைப்படுத்தப்பட்டு பெரியதாக்கப்படுகிறது.
  6. அனைவருக்கும் அனைத்தும் தெரிவதில்லை. ஆனால், அனைவருக்குமே ஏதோ ஒன்று தெரிந்திருக்கிறது.
  7. மனிதர்கள் அனைவருமே மனிதர்களாய் மட்டுமே பார்க்கப்பட வேண்டியவர்கள்.
  8. நாம் அனைவருமே நமது எண்ணங்களால் வீழ்த்தப்படுகிறோம்.
  9. இங்கு யாருக்குமே அவர்களுடைய தேவை என்ன என்பது தெரியாது. பிறருடைய தேவைகளையே அவர்களுடைய தேவைகளாக நினைக்கிறார்கள்.
  10. மனிதர்களுக்கு பிறரைக் கேள்வி கேட்டு தாழ்த்துவது மிகவும் பிடிக்கும்.
  11. நம்மை வேண்டாம் என்று விட்டு சென்ற நபர்கள், ஏதோ ஒரு சூழலில் நம்முடைய பிரிவை எண்ணி வருந்துகிறார்கள்.
  12. இலக்குகளை நிர்ணயிப்பது சவாலானது. சொல்ல வேண்டுமென்றால், நமது இலக்குகளை நமக்கு தேர்ந்தெடுக்கத் தெரிவதில்லை.
  13. ஆன்லைனில் நாம் பார்க்கும் அனைத்துமே பிறருடைய அனுபவங்கள். நாம் நினைத்தால் யாரும் அனுபவிக்காத புதிய அனுபவங்களைப் பெறமுடியும்.
  14. இந்தியத் திருமணமுறை ஒரு சாபக்கேடு.
  15. கோரா எனது பொன்னான நேரத்தை அளவுக்கு அதிகமாக களவாடுகிறது.