Posts

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் தாமதமாக கற்றுணர்ந்த விஷயங்கள் எவை?

  உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் தாமதமாக கற்றுணர்ந்த விஷயங்கள் எவை? விடுமுறை எடுத்து HRயை பகைத்துக் கொண்டு நண்பர்களின் திருமணத்தில் பங்கு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாறாக நண்பர்களிடம் எடுத்து சொல்லி இருந்திருக்கலாம். குறிப்பிட்ட வயதிற்கு பிறகு உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் எப்படா நம்ம பணி தளத்தில் நம்ம நாற்காலியில் போய் உட்காருவோம் என்று தான் இருக்கும். அதிக விடுமுறை கூட போர் அடித்துவிடும். கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு உங்களை அறியாமலே எடை கூடிக் கொண்டே செல்லும். முதலிலே கட்டுப்பாடுடன் உணவை எடுத்துக் கொள்வது நல்லது. எந்த உறவுக்கும் அடிமையாகி விடவே கூடாது. அதில் இருந்து வெளிவருவது ரொம்ப கடினம். அது அண்ணனோ தம்பியோ. அவர்களுக்கென்று ஒருவர் வந்து நம்மை விரட்டுவதற்குள் நாமே விலகிவிடுவது சிறந்தது. சமூதாயத்தில் முதியவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். முதியவர்களுடனான நல்லுறவு ஒரு நூலகத்தில் உள்ள புத்தகங்களை வாசிப்பதற்கு சமம். எந்த பிரச்சனைக்குமே தீர்வு அவரவர் தான். பிரச்சனையுடன் வருபவர்களின் தேவை அவர்கள் பேசுவதை யாராவது உண்மையில் கவனிக்க வேண்டும் என்பதே. அவர்கள் பேசுவதை கவனிப்பத...

உங்கள் வாழ்வில் மிகவும் தாமதமாக தெரிந்து கொண்ட சில உண்மைகளை பகிர முடியுமா?

  இருபதுகளில்,  இளைஞர்கள் நிம்மதியாக இருப்பதில்லை.  குறிப்பாக ஆண்கள்… தேவையை விடுத்து,  ஆடம்பரத்தை நோக்கியே மனம் செல்கிறது. நம்மையும் அறியாமல் நம்மை தொற்றிக் கொண்டு வரும்  முதல் காதல் தான் உண்மையான காதல் . இரண்டாம் முறை மூன்றாம் முறை வருவது, என்னைப் பொருத்தவரை கால்குலேட்டெட் காதல் என்றே கூறுவேன். ஈர்ப்போ, காமமோ, முதல் காதல் என்று நாம் செய்யும் ஒன்று,  நம் நினைவுகளை விட்டு விலகுவது கடினம்… சாதாரண விடயங்கள்  மிகைப்படுத்தப்பட்டு பெரியதாக்கப்படுகிறது. அனைவருக்கும் அனைத்தும் தெரிவதில்லை. ஆனால்,  அனைவருக்குமே ஏதோ ஒன்று தெரிந்திருக்கிறது. மனிதர்கள் அனைவருமே  மனிதர்களாய் மட்டுமே பார்க்கப்பட வேண்டியவர்கள். நாம் அனைவருமே நமது  எண்ணங்களால் வீழ்த்தப்படுகிறோம். இங்கு யாருக்குமே அவர்களுடைய தேவை என்ன என்பது தெரியாது.  பிறருடைய தேவைகளையே அவர்களுடைய தேவைகளாக நினைக்கிறார்கள். மனிதர்களுக்கு பிறரைக்  கேள்வி கேட்டு தாழ்த்துவது மிகவும் பிடிக்கும். நம்மை வேண்டாம் என்று விட்டு சென்ற நபர்கள், ஏதோ ஒரு சூழலில்  நம்முடைய பிரிவை எண்ணி வருந்துகிறார்கள்...

மனமுதிர்ச்சி என்றால் என்ன? மன முதிர்ச்சியின் அடையாளங்கள் என்ன?

  மன முதிர்ச்சி என்றால் என்ன? What is Maturity of Mind ? 1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. Correcting ourselves without trying to correct others. 2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. Accepting others with their short comings. 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். Understanding the opinions of others from their perspectives. 4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். Learning to leave what are to be avoided. 5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். Leaving the expectations from others. 6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. Doing whatever we do with peace of mind. 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. Avoiding to prove our intelligence on others. 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். Avoiding the status that others should accept our actions. 9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். Avoiding the comparisons of ourselves with others. 10. எதற்குமே சஞ்சலப்படாமல் மன...

காமத்திற்காவும் பணத்திற்காவும் போலி உறவில் இருப்பவர்களுக்கு என்ன அறிவுரை கூறுவீர்கள்?

  கேட்டு கொள்ள தயாராக இருப்பின் அவர்களுக்கு அறிவுரை கூறுவதும் நம் கடமையே, 1 பணம் வந்து போகும் உங்கள் தேவைக்கு போக அதிகம் பணம் வைத்து என்ன வாங்க போகிறீர்கள், சொல்லப்போனால் பணம் தான் மனிதர்களை மனிதர்களாக மற்றவர்களுக்கு காட்டுகிறது நான் மறுக்க வில்லை, நேர்மையா உழையுங்கள் செலவு பண்ணுங்க யாரும் தப்பு சொல்ல போறது இல்ல, தவறான வழி பணம் உங்கள் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடிட தொடங்கும்,, 2 காமம் அதை சரியான வழியில் மேற்கொள்ளுங்கள், முடிந்த வரை மனைவி, கணவனிடம் காணுங்கள், உங்கள் சுயத்திற்காக யாரையும் பலி கொடுக்காதிர்கள், 3 நீங்கள் செய்யும் தவறு உங்களை மட்டும் இல்ல சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும் உங்களுக்கு உள்ள விருப்பம் உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க கற்று கொள்ளுங்கள் நிறைய நல்ல செயல்களை தேடி செயுங்கள் கேவலமா வாழ்ந்து சாவதை விட உன்னை போல் ஒருவன் வாழ அஷை பட வாழ்ந்து விட்டு செல்லுங்கள் தவறுகள் செய்யவும் அதை திருத்தி கொள்ளவும் தான் இந்த வாழ்க்கை பல பேர் துன்பத்தில் துவலும் அதே நேரத்தில் பல பேர் இங்கு இன்பத்தில் மிதக்க தான் செய்கிறார்கள் உங்களால் ஒருவர் பாதிக்க பட மாட்டார்கள் என்பதை எப்போதும...

ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் ரூபாய் 15,00,000 செலுத்தப்பட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்?

Image
  ஒரே நாளில் இந்தியா திவாலாகிவிடும். அனைவருமே லட்சாதிபதி,சில குடும்பத்தலைவர்கள் கோடீஸ்வரர் ஆகிவிடுவார்கள். மூன்றிலொருபங்கு மக்கள் வேலைக்கு செல்வதை நிறுத்திவிடுவார்கள்.சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பொருள்கள் உற்பத்தி குறையும்.அதே சமயம் விலைவாசியும் பலமடங்கு அதிகரிக்கும். பணதடுமாற்றம் ஏற்பட்டு இந்தியா ஸாரி ஸாரி பாரத் சீரழிந்துவிடும்.

எதுபோன்ற ஆண்களை அனைத்துப் பெண்களுக்கும் கட்டாயம் பிடிக்கும்?

  அன்பான உள்ளம் கொண்ட அக்கறை மிகுந்த ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். கோபப்பட்டு திட்டிவிட்டு சிறிது நேரத்தில் திரும்பி வந்து பேசும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும் .மனதில் வஞ்சனை இல்லாமல்.. நம் மீது தவறு இருந்தால் உரிமையோடு தட்டிகேட்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். சிறு சிறு சண்டைகள் வருவது இயல்பு.. அதை பெரிதுபபடுத்தாமல் சிறு குழந்தைகள் போல எல்லாம் மறந்து பேசிடும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். கொஞ்சம் திமிரான.. அதிகம் பாசமான.. எந்த பிரச்சனையும் எளிதாக கையாளத்தெரிந்த.. திறமை மிகுந்த ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்…

இறப்பை நினைத்து எப்போதும் பயமாக இருக்கிறது. பேருந்தில் காரில் இப்படி பயணம் செய்யும் போதும் ஏதாவது ஆகுமோ என்று தோன்றுகிறது. வீட்டுக்குள்ளே பயந்து வாழ்கிறேன். இந்த பயத்தை எப்படி போக்குவது?

  எனக்கும் இது போல எண்ணங்கள் வரும்.. நான் பேருந்தில் ஏறியதும் கடவுளை வணங்குவேன். ஒரு நாள் ஒருவர் மது போதையில் சாலையின் நடுவே நடனம் ஆடிக்கொண்டு இருந்தார். நெரிசலான இடத்தில் பயணிகளுக்கு இடைஞ்சலாக இருந்தது அவரின் வேடிக்கையான விஷயம். பேருந்து ஓட்டுநர் பயந்துகொண்டே பேருந்தை இயக்கினார். எந்த காயமும் இல்லாமல் தப்பித்தார் மதுபோதை ஆசாமி. மற்றொரு நாள் நான் கண்டது, சாலையின் ஓரமாக நடை பாதையில் நடந்து கொண்டிருந்த ஒரு இளம்பெண் மீது,ஒரு பேருந்து தன்னிலை மறந்து, ஓரமாக சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது மோதி அதே இடத்தில் அந்த பெண் துடிதுடித்து இறந்ததை என் கண் முன்னே கண்டேன். இதிலிருந்து நான் புரிந்துகொண்டது என்னவென்றால், நம் இறப்பை தீர்மானிக்கும் உரிமை நமக்கில்லை என்பது தான்.d